நீலகிரி காய்கறி கண்காட்சி: தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள்

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி: காய்கறி கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தினசரி அங்காடிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

மாவட்டத்தில் கோடை விழா சிறப்பாக கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் வரும் மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் காய்கறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில், காய்கறிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக அரங்குகள் அமைத்து போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தினங்களிலும் மாவட்டத்தில் கோத்தகிரி, உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் வட்டாரங்களில் உள்ள உழவர் சந்தைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தினசரி காய்கறி அங்காடிகளை சுற்றியுள்ள இடங்கள் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும், விற்பனைக்கு தயாராக உள்ள காய்கறிகளை நல்ல முறையில் காட்சிப்படுத்துவோருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சி நடைபெறும் இரு தினங்களிலும் அனைத்து உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி அங்காடிகளை அதிகாரிகள் பார்வையிடுவார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விற்பனையாளர்கள் தங்கள் அங்காடிகளை தூய்மையாக பராமரித்து பரிசுகளை வென்றிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...