மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் பேரணி

கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 4 சதவீத அரசு வேலைவாய்ப்பு, இலவச வீடு, கல்வி, உதவித் தொகையை ரு.5000-மாக உயர்த்தி வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அஷோக் ஸ்ரீநிதி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.

கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...