அ.தி.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை: கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் துணை ராணுவ படையினர் வந்துள்ளது பயிற்சிக்காக மட்டுமே தவிற வேறு எதுவும் இல்லை. டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரது இரண்டு கட்சிகளும் நிலைக்காது. விரைவில் காணாமல் போய்விடுவார்கள். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கானா முதல்வரும் எந்த நிலையில் பேசினார்கள் என்று தெரியாது. தற்போது தான் அதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.

அ.தி.மு.க.

பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தின் போது வழங்கப்பட்டு வரும் நிதி எப்போதும் நிறுத்தப்படாது. அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் வழக்கம் போல் சின்னம் கிடைத்துவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...