மேட்டுப்பாளையத்தில் சுற்றித்திரியும் மர்ம விலங்கு: மனிதர்களையும், ஆடுகளையும் தாக்குவதால் மக்கள் அச்சம்

கோவை: மேட்டுப்பாளையத்தின் மலையடிவார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் இரவு நேரத்தில் நடமாடும் மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தின் மலையடிவார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் இரவு நேரத்தில் நடமாடும் மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு, தாயனூர், மேடூர், பணப்பாளையம் போன்ற மலையடிவார கிராமங்களில் நடமாடி வரும் மர்ம விலங்கால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் இவ்விலங்கு அவ்வப்போது விவசாய தோட்டங்களில் உள்ள பட்டிகளில் அடைத்து வைக்கப்படும் ஆடுகளைக் கொன்றுவிடுவதாக தெரிவிக்கும் கிராமத்தினர், அச்சமயங்களில் எதிர்படும் மனிதர்களையும் விரட்டுவதாகவும் கூறுகின்றனர். இது சிறுத்தையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.



நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த இந்த மர்ம விலங்கு தோட்டத்திற்குள் இருந்த அவரை விரட்டியுள்ளது. ஓடி சென்று உயிர் தப்பிய செந்தில்குமார் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அவரது தோட்டத்தில் பதிந்துள்ள மிருகத்தின் கால்தடத்தை ஆய்வு செய்து, இக்கால்தடம் சிறுத்தையுடையதல்ல என்றும் வேறு ஏதேனும் விலங்காக இருக்கலாம் என்றனர்.



மேலும், அத்தோட்டத்தில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்திச் சென்றுள்ளனர். சிறுத்தை போன்ற உடலமைப்புடன் ஊருக்குள் நுழையும் இவ்விலங்கின் நடமாட்டத்தால் பகல் நேரங்களில் கூட தோட்டங்களில் விவசாய பணிகளை செய்ய அச்சப்படுவதாகவும், மாலை நேரத்திற்கு பின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறும் இப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினர் இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...