தீ விபத்தின் போது 'செல்பி' எடுக்காதீர்கள்., அது உயிருக்கே ஆபத்தாக முடியும்..! - தீயணைப்புத் துறை

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: தீ விபத்தின் போது சிலிண்டர் போன்றவை வெடிக்கக் கூடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் மக்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் 'செல்பி' எடுக்க வேண்டாம் என்றும் கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி. பிரதிப்குமார் தெரிவித்துள்ளார்.

செல்பி

செல்பி மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் எங்கும் செல்பி, எதிலும் செல்பி என்ற நிலை உருவாகியுள்ளது. சுற்றுலா தளங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அதே போல் சாலை விபத்து, தீ விபத்து ஏற்படும் பகுதிகளிலும் சிலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்று.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பிரதிப்குமார் கூறுகையில், "தீ விபத்தின் போது அதன் அருகில் செல்வதோ அல்லது செல்பி எடுக்க முயல்வதோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிலிண்டர் அல்லது வேறு ஏதாவது வெடிபொருள் இருந்தால் அது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்போது வேடிக்கை பார்ப்பவர்களின் உயிருக்கே அது ஆபத்தாக முடியும்." என்றார்.

தீ விபத்தின் போது அதனை அணைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் தோறும் தீயணைப்பு வீரர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்தும், மக்கள் அந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளிப்பார்கள்.

இது குறித்து பிரதிப்குமார் கூறுகையில், "மாதம் தோறும் பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் அல்லது கிராமப்புறங்களில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம். போதுவாக கோடை கலங்களில் தீ விபத்து குறித்து அதிக அழைப்புகள் வரும் ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு அழைப்புகள் குறைவே. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...