அடிதடியில் முடிவடைந்த கூட்டுறவு சங்க தேர்தல்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...