சாலை அமைக்க விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் - அவிநாசி சாலையை இணைக்கும் வகையில் அமைக்கவிருக்கும் ரிங் ரோட்டிற்காக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை அன்னூர் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 8 கி.மீ., நீளம், 150 அடியில் அகல வட்ட சாலை அமைக்க கரியாம்பாளையத்தில் இருந்து தாசம்பளையம் வரை அவிநாசி-அன்னூர் சாலையை இணைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் அளவீடு செய்து நெடுஞ்சாலை துறையினர், கல் பதித்து வருகின்றனர். முன்னதாக அறிவிக்கப்பட்ட வட்டசாலை திட்டத்தை மாற்றி, தற்போது முன் அறிவிப்பின்றி தங்களது விவசாய நிலங்களில் கல் பதித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தானியம், கரும்பு, தென்னை, மஞ்சள், வாழைகள் பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட்ட சாலை விவசாய நிலங்கள் வழியாக அமைப்பதால், 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வட்டசாலை அமைந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நண்மை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், முறையான அளவீடு செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், இவ்வாறு கூறினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கும் மனு அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...