குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடிய தி.மு.க-வினர் கைது: கோவையில் போலீஸ் குவிப்பு

கோவை: தடைசெய்யப்பட்ட குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வந்த தகவலையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: தடைசெய்யப்பட்ட குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக நேற்று தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக வந்த தகவலையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் டெல்லியை சேர்ந்த அமித்ஜெயின் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் போன்றவை உற்பத்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குட்கா தொழிற்சாலை செயல்படுவது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையின் போது குட்கா பொருட்கள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்களும் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 பண்டல் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆலையின் மேலாளர் ரகுராமன், வடமாநில தொழிலாளர்கள் அஜய், ராம்தேவ், சோஜிராம் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், டெல்லியில் உள்ள ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயினை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குட்கா விவகாரத்திற்கு எதிராக கோவை மாவட்ட தி.மு.க-வினர் அந்த தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கண்ணம்பாளையம் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

குட்கா தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அக்கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் போன்ற இடங்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி நிலவி வருகிறது.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...