திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதலமைச்சர் குறித்த விளம்பரம் நிறுத்தம்

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'சாமி எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அர்ச்சனை' என்ற விளம்பரத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த விளம்பரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வேலை கிடைத்ததற்கு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வருகிறார். பூசாரி அந்த பெண்ணுக்கு அர்ச்சனை செய்யும் போது அந்தப் பெண், சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்ல, சாமி பெயருக்கு என்கிறார். இதற்கு பூசாரி..எந்த சாமிக்கு என்று கேட்க..அந்தப் பெண் நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு என்கிறார். திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்தவர்கள் இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடீயோவிற்கு தற்போது மீம்ஸ்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த விளம்பரத்தை திரையரங்குகளில் ஒளிபரப்புவதை நிறுத்த தமிழக செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறப்பட்டு, அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது," எனக் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...