பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உதகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகை : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி : பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகளும், இயற்கை சூழல் நிறைந்த மாவட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது அங்கு கோடை சீசன் நிலவி வருவதால், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. 

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்பளர்கள், தட்டுகள், பைகள் போன்றவற்றை வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் வீசி விட்டு செல்வதால் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அதை உட்கொள்ளும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கி வருவதை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதித்தும், மாவட்ட எல்லைகளில் இதற்க்காக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.



ஆனாலும் சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று உதகை படகு இல்லத்திற்க்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது. 

இதில் பள்ளி மாணவிகள் சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதோடு பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...