ஆளில்லா விமானத்தை உருவாக்க 'எம்.ஐ.டி.' கல்லூரிக்கு ஆலோசகரானார் நடிகர் அஜித்

சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


சென்னை : சென்னை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்க இருக்கும் நவீன ஆளில்லா விமானத்திற்கு ஆலோசகர் மற்றும் சோதனை பைலட்டாக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் அஜித்குமார் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார். அதே நேரத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும் திறமை பெற்றுள்ளார். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்நிலையில் அஜித்-க்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.

ஆளில்லா விமானம் மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித்குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் கல்லூரிக்கு அவர் வந்து செல்லும் போதும் அவருக்கு ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. அந்த பணத்தை கல்லூரி ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கியுள்ளார் அஜித். 

இதனால் குஷியான அவரது ரசிகர்கள், இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...