கோவை மாவட்ட வன அதிகாரியை பணியிட மாற்றம் செய்தது ஏன்..? வன ஆக்கிரமிப்பாளர்களின் தலையீடா ..? என வனஆர்வலர்கள் சந்தேகம்

கோவை : கோவை மாவட்ட தலைமை வனபாதுகாவலர் திருநாவுக்கரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு வன அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கோவை : கோவை மாவட்ட தலைமை வனபாதுகாவலர் திருநாவுக்கரசு திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு வன அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலராக வி. திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இவர், எஸ். சுப்ரமணியம் என்பவருக்கு பதிலாக வனபாதுகாவலர் பணியில் அமர்த்தப்பட்டார். திருநாவுக்கரசு ஏற்கனவே தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், அவர், திண்டுக்கல் மாவட்ட தலைமை வனபாதுகாவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இவரது பணி மாறுதலால், காலியான கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநர் பதவிக்கு, தற்போது மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இல்லாமல் வன அதிகாரி திருநாவுக்கரசு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

"ஒரு நேர்மையான அதிகாரியை திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது", இவ்வாறு ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகின்றார். 

மேலும், ஓய்வுபெற்ற வனஅதிகாரி கூறுகையில், " திருநாவுக்கரசு மாவட்ட வன அலுவலராக இருக்கும் போதே, வன ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை பணியிட மாற்றம் செய்வதற்கான காரணங்களும் ஏதும் இல்லை. தமிழகத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மைகள் தெரிந்திருந்தாலும் கருத்து மட்டுமே கூற முடியும். மேலும், தீபக் ஸ்ரீவஸ்தவாவும் நேர்மையான அதிகாரிதான்," என்றார். 

கோவை மாவட்டத்தின் தலைமை வனபாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனவியல் அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள தீபக் ஸ்ரீவஸ்தவா முதுமலை புலிகள் வனக் காப்பகத்தின் கள இயக்குநராகவும் இருக்கிறார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...