ரூ. 11 லட்சம் செலவு செய்தும் பிரச்சனை தீரவில்லை : 70-வது வார்டு மக்கள் வேதனை

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை : கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அரை குறை வேலையால் சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு தீர்வில்லாமல்,வார்டு எண் 70-ல் வசித்து வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.



 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட புலியகுளம் பிரதான சாலை, ஆறுமுகம் சந்து, ஆறுமுகம் வீதி, சின்ன மருதாசல வீதி ஆகிய பகுதிகளில் நிலவிவரும் சாக்கடை அடைப்பு பிரச்சனையை சரி செய்ய மாநகராட்சியால் ரூ. 11 லட்சம் செலவு செய்யப்பட்டு கழிவு நீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டது.

வாய்க்காலை சீர் செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் சாக்கடை அடைப்பு அதிகமானதோடு, பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. இதனால், பணம் வீணானதோடு சாக்கடை அடைப்பும் சரியாகவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இது தொடர்பாக, அப்பகுதியில் வசிக்கும் சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து கூறுகையில், "பல போராட்ட முயற்சிக்கு பிறகே சாக்கடை வடிகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பணி நடைபெறும் போதே கழிவு நீர் வாய்க்காலை முறையாக சுத்தம் செய்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாம். ஆனால், அதை பொருட்படுத்தாமல், பிரதான வடிகால் பாதையை, கழிவுநீர் வாய்க்காலை விட அதிகமான உயரத்தில் அமைத்துவிட்டனர். இதனால், கழிவுநீர் வடிந்து செல்ல முடியாமல் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. மழை நேரங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. கொசுத் தொல்லை, துர்நாற்றம் என சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறோம்." என்றார்.



புலியகுளம் பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிகால் 3 அடி உயரத்தில் ஆபத்தான வேகத்தடையாக தற்போது காட்சியளிக்கிறது.



"பரபரப்பான சாலையில் இந்த வேகத்தடை அமைந்திருப்பதால், இப்பகுதியில் சாலை விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம், வேகத்தடையை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, நடந்து சென்ற முதியவர் மீது மோதியதால் முதியவர் பரிதாபமாக பலியானார். வாகனங்கள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வேகத்தடையின் உயரம் சீராக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்." என்கிறார் அப்பகுதியில் வசித்து வரும் சி.பி.எம் ஆட்டோ சங்க செயலாளர் நாகராஜன்.

பொதுமக்களுக்கான திட்டங்களை அவர்களே போராடிப்பெற்றுக் கொள்ளும் நிலையே நிர்வாகத் தோல்வி தான். அதையும் அரைகுறையாகச் செய்து மக்களை சிரமப்படுத்துவது மாநகராட்சி நிர்வாகத்தின் திறனற்ற நிலையை அப்பட்டமாக காட்டுகிறது.

மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும் முன், சாக்கடை வடிகாலை சீர்செய்து, சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...