பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளிப் பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இன்று காலை 40 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் வைத்து வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர் தியாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அரசு விதிமுறைகளின்படி, பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா..?, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா..?, வாகனங்களின் பிரேக், கியர் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா..? போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், சந்தேகத்திற்குரிய பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தியாகராஜன், தானே பேருந்தினை ஓட்டி அவற்றின் தரம் குறித்து சோதனை செய்தார்.

மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி, பள்ளி வாகனங்களை இயக்குவது, அதிவேகமாகப் பேருந்துகளை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங்களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியை நகர்த்துவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த விதிகளை மீறுவோரின் வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாற்பது வயதைக் கடந்த ஓட்டுனர்கள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...