கோவை - செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தப்படும் : சேலம் கோட்ட மேலாளர்

கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து பரிட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட செங்கோட்டை, நெல்லை சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தென்னக இரயில்வே தலைமையிடம் வலியுறுத்தப்படும் என கோவை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட மேலாளர் யு.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.

புதிய மண்டல மேலாளராகப் பதவியேற்ற பின் கோவைக்கு வந்த யு.எஸ். ராவ் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " மண்டல மேலாளராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கோவை ரயில்நிலையம் வந்துள்ளேன். தமிழகத்தில் இரண்டாவது முக்கிய நகரமான கோவையில், பயணிகளின் வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறை இருந்தால் அதனை உடனே நிவர்த்தி செய்வேன். 

பயணிகள் வசதிக்காக முதல் லிப்ட் சில நாட்களில் இயக்கப்பட உள்ளது. இரண்டாவது லிப்ட் ஆறு மாதத்திற்குள் இயக்கப்படும். 

ரயில் நிலையத்திலுள்ள 4 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலாளர் அறை அருகே உணவுக்கூடம் அமைப்பதற்குப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. வருகின்ற வருடங்களில் பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு செயல்பட உள்ளோம்.

நகரும் படிக்கட்டுகள் மின்சார பற்றாக்குறையின் காரணமாக அவ்வப்போது இயங்கவில்லை. விரைவில் அது சரிபடுத்தப்படும்.

இரு அடுக்கு ரயில் கோவையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு சேலம் கோட்டத்தின் சார்பாக அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அடுக்கு ரயில் சேவைக்கான நேரம் மற்றும் தேதி இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்படும். பரிட்சார்த்த முறையில் செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. பயணிகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ரயில்களை மீண்டும் இயக்கத்  தலைமையிடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு தற்போது ரயில்கள் அதிகப்படுத்த வாய்ப்பில்லை," என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...