பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டது : தனியரசு கடும் தாக்கு

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : நீட் விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டதாக கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 

நீட் கட்டாயம் என்று கூறியதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்ததுவிட்டது. இந்த நிலையில், நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்காமல், மாநில அரசு துணையாக இருந்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி மற்றும் சூழ்நிலை ரீதியாகவும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். 

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரைப் பறிக்கும் பா.ஜ.க., மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து வருகிறது. இந்த பிரச்சனையில் மாநில அரசின் இயலாமையை வன்மையாக கண்டிக்கிறோம். 

போராட்டம் 

ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து காவிரியை பெறுவதிலும், நீட்டை ஒழிப்பதிலும் போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பா.ஜ.க., கேள்விக் குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை போவதாக சந்தேகம் உள்ளது. மாநில உரிமைகளுக்காக தமிழக முதலமைச்சர் அறவழிப் போராட்டம் நடத்தியிருந்தால், தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கலாம். இனியாவது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது நிராகரிக்கப்பட்டால், அவர்கள் இருவரும் மத்திய அரசைக் கண்டித்து அற வழியில் போராட வேண்டும். மேலும், சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்துக் கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...