மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்: எஸ்.டி.பி.ஐ

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்பதால் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோற்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழகம் போராடியதற்காக, மாணவர்களை மத்திய அரசு அலைக்கழித்துள்ளது. கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. மாணவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, அவரின் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

ஆளுநர் மீது நிர்மலா தேவி எழுப்பிய புகார்களின் நிலை என்ன? கருத்தியல் ரீதியாக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்த்து வருவதால் பா.ஜ.க., அரசு வன்மத்துடன் எங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சசிக்குமாரின் கொலை வழக்கு மட்டும் என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்? உக்கடம் மேம்பாலம் கட்டுமானம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களை களைந்துவிட்டு, ஆத்துப்பாலம் வரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...