டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை முடித்து வைக்கிறது சி.பி.ஐ.

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான டி எஸ் பி விஷ்ணுபிரியா மரணம், தற்கொலைதான் எனக் கூறி இந்த வழக்கை முடித்து கொள்வதாகக் கூறி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வந்த நிலையில், அதனை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை முடித்துக் கொண்ட சி.பி.ஐ., கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே. தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லாததால் விசாரணையை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் சி.பி.ஐ., அறிக்கையின் முகாந்திரத்தைச் சுட்டிக்காட்டி விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், சி.பி.ஐ., அறிக்கையில் ஏதேனும் கருத்துக்கள் கூற விரும்பினால் வருகிற 9-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, நாளை மறுதினம் கோவை வரும் அவரது தந்தை, சி.பி.ஐ., அறிக்கையைப் படித்து பார்த்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...