மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வனத்திற்கு திரும்பிய காட்டு யானை

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். இதையடுத்து, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டை கடித்ததில், சுமார் 55 வயதுடைய காட்டு யானையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று மாலை மயங்கி விழுந்தது.

இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. இது குறித்து மருத்துவக் குழுவைச் சேர்ந்த என்.எஸ்., மனோகரன் கூறுகையில், "பொதுவாக பிற காட்டு யானைகளைப் போலவே, இந்த யானையும் குடல் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.



இதனிடையே, உடல்நலம் பாதித்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் மகிழ்ச்சியடைந்த வனத்துறையினர், சிகிச்சைப் பெற்ற யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...