சோலார் மின் உற்பத்தி செய்ய 30 சதவீதம் மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: சோலார் மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி (சோலார்) உற்பத்தி செய்யும் சாதனத்தை கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-



கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய அரசு, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சாதனங்களை (Grid Connected Roof Top Solar System) கட்டிடங்களின் மேற்கூரையில் நிறுவுவதற்கு 30 சதவீத மானியம் அறிவித்துள்ளது.

அவ்வாறு அமைப்பவர்களின் உபயோகத்திற்கு போக, மீதமுள்ள மின்சாரம், மின்வாரியத்திற்கு நிகர அளவி (Net Meter) மூலம் அனுப்பப்படுவதால் மின்கட்டணம் செலுத்துவது முற்றிலும் குறைக்கப்படுகிறது.

மானியம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தங்களுடைய மின்சார உபயோக தேவைக்கேற்ப ஒரு கிலோ வாட் முதல் 500 கிலோ வாட் வரை பயன்பெறலாம். இந்த மானியத்தை பெறுவதற்கு அனைத்து தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கல்விக்கான பணிமனைகள், விடுதிகள் போன்றவை தகுதியானவை ஆகும்.

பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இயங்கி வரும் TEDA பிரிவில் உரிய ஆலோசனைகள் பெறலாம். மேலும், அலுவலக பணி நேரங்களில் TEDA பிரிவின் உதவி பொறியாளரை நேரடியாகவும் அல்லது 7708064702 என்ற தொலைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...