தெற்கு ஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த கோவை வீரருக்கு உற்சாக வரவேற்பு

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: தெற்கு ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த வீரருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளையோருக்கான தடகள போட்டிகள் கடந்த 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இலங்கை சுகதாசா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பூடான் உள்ளிட்ட 8 நாடுகளைச் 300-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், 3 வீராங்கனைகள் என எட்டு பேர் பங்கேற்றனர்.

இதில், கோவை அச்சீவர்ஸ் அத்தலெடிக் கிளப்பைச் சேர்ந்த மாணவர் கமல்ராஜ், மும்முறை தாண்டுதல் (டிரிபிள் ஜம்ப்) போட்டியில் கலந்து கொண்டு 16.05 மீட்டர் நீளம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு 15.74 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்து விமானம் மூலம் கோவை திரும்பிய காமராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :- ஜூனியர் தடகள போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். அந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வதே தனது லட்சியம். தற்போது, ஆசிய அளவில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் ரேங்கிங்கில் முதல் இடத்திலும், உலக அளவில் 7-வது இடத்தில் இருக்கிறேன். மேலும், இட அளவில் முன்னேறக் கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனத் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...