நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டம் : சேலம் கோட்ட மேலாளர் பேட்டி

மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம் : நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை இயக்கத் திட்டமிட்டிருப்பதாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் நீலகிரி மலை ரயிலின் இயக்கம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் இன்று ஆய்வு நடத்தினார். 

இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் உள்ள மலை ரயில் கண்காட்சியகம் மற்றும் ரயில்வே பணிமனைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சுற்றுலா திட்டங்களுக்கு ரயில்வே துறை முன்னுரிமை கொடுத்து, பயணிகளின் வசதிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலுக்கு கூடுதலாக ஒரு என்ஜினும், பதினைந்து புதிய பெட்டிகளும் தயாராகி வருகிறது.

தற்போது, கோடை விடுமுறையை முன்னிட்டு இங்கிருந்து இயக்கப்படும் கூடுதல் மலை ரயிலின் கட்டணம் அதிகம் என்ற கருத்து உள்ள போதிலும், சிறப்பு ரயிலுக்கு இக்கட்டண உயர்வு தவிர்க்க இயலாது.

மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரிவாக்க திட்டம் உள்ளது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை ஆறு மணிக்குள் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. அன்று இரவு 7.45 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிப் புறப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த இடைபட்ட நேரத்தில், இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை வழியாக மதுரை வரை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...