உதகையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது ரோஜா கண்காட்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டு நாட்கள் நடக்கும் ரோஜா கண்காட்சி வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.



உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் ரோஜா கண்காட்சியை சிறப்பாக நடத்த தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். உலக ரோஜா சம்மேளனத்தினால் சிறந்த ரோஜா பூங்காவாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பூங்காவில் சுமார் 4,000 வகையான ரோஜாக்கள் சுமார் 40 ஆயிரத்திற்கு மேலான செடிகளில் பூத்து குலுங்குகிறது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



மேலும் ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலிருந்து பல வண்ண ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு வடிவமைப்புகளில் காட்சிப் படுத்தப்படவுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த ரோஜா பூங்காவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ. 46 லட்சம் மதிப்பில் காட்சி அறையும் அமைக்கப்பட்டு வருவது இப்பூங்காவிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...