பழுதான மோட்டாரை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர், கொடுவாய் பகுதியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா பள்ளியின் தாளாளர் ஆவார். இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த மணியாள் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நீர் இறைக்கும் மின் மோட்டார் பழுதான காரணத்தால் சதீஷ்குமார் அதை சரி செய்ய முயன்றார்.



அப்போது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையறிந்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மணியாளையும் மின்சாரம் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் மத்திய போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...