மலர் கண்காட்சியையொட்டி நீலகிரியில் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி வரும் 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை சீசன் கொண்டாடப்படுவது வழக்கம். இச்சமயங்களில் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு சற்று மவுசு அதிகம். இதனைக் காண உலக முழுவதிலும் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு 122-வது மலர் கண்காட்சி 18-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைவரும் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கும் வகையில், 18-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ம் தேதி விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் 25-ம் தேதி இம்மாவட்டத்திற்கு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...