யானைகள் ஊடுருவலுக்கு எச்சரிக்கை விடுக்கும் கருவி: மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.


மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய கருவிகளை மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் பொருத்தும் பணியினை வனத் துறைனர் தொடங்கியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற பகுதிகளில் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, எதிர்படும் மனிதர்களையும் தாக்குகிறது. இதன் காரணமாக, வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உருவானது.

புதிய கருவி

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வனத்தையொட்டியுள்ள ராயர் ஊத்துப்பதி என்ற கிராமத்தில் உயரமான ஒரு கட்டிடத்தின் மீது எச்சரிக்கை கருவி (ELEPHANT ALERT) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவியின் மேற்பகுதியில் சிகப்பு மின் விளக்கும், சப்தம் எழுப்பும் 'சைரனும்' பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் எண்களை பதிவு செய்வதற்கான சிம் கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.



வனத்தைவிட்டு யானைகள் வெளியேறியதாக தகவல் கிடைக்கும் பட்சத்தில், வனத்துறையினர் இந்த கருவிக்கு ஒரு 'ரிங்' விடுவார்கள். அடுத்த நொடியே மேலே உள்ள சிகப்பு விளக்கு எரிவதோடு, மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சப்தம் கேட்கும் அளவிற்கு சைரன் பலத்த ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். இதனையடுத்து, கிராம மக்கள் தங்களது பகுதியில் யானைகள் நடமாட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கலாம். மேலும், வெளியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடலாம்.

பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரின் இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, இது போன்ற எச்சரிக்கை கருவிகளை மலையோர கிராமங்களில், மொத்தம் 47 இடங்களில் பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது போன்ற முன்னெச்சரிக்கை கருவிகளை, யானைகளால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் பல்வேறு இடங்களிலும் பொருத்த மாவட்ட வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...