நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் நீலு உடல்நலக்குறைவால் காலமானார்.

1936-ம் ஆண்டு பிறந்த நீலுவின் இயற்பெயர் நீலகண்டன் என்பதாகும். சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர், பள்ளியில் பயிலும் போதே நாடகங்களில் நடித்து வந்தார். 1969-ம் ஆண்டு ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் நீலு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், நூற்றுக்கு நூறு, கவுரவம், வேலும் மயிலும் துணை, முகமது பின் துக்ளக், அம்மா பொண்ணு, அவ்வை சண்முகி, வெற்றி விநாயகர், சூரியவம்சம், அந்நியன், கல்யாண சமையல் சாதம், த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன், அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் அசத்தி வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், சென்னையில் நீலு இன்று காலமானார். அவருக்கு வயது 82. நீலுவின் மறைவிற்கு திரையுலகத்தினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...