குடிநீர் கட்டணம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகம்: குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும், குடிநீர் கட்டணமாக மாநகராட்சியால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 210 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் சங்கத்தினர் பாரதி பார்க் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து நடைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில், கோவை மாநகராட்சி மட்டும் ரூ. 210 கோடி பாக்கி வைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கோவை மாநகராட்சி சுமார் ரூ. 250 கோடி வரிவசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை பாக்கிகளை விரைவில் வசூல் செய்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைப்பளுவை உயர்த்தி ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உதவி தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார், உதவி செயலாளர் பெலிக்ஸ் மற்றும் குடிநீர் வடிகால் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...