கோவையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது - வேளாண் பல்கலை.,

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கோடை மழை தற்போது வரை 268 மி.மீ வரை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் அணைகளின் நீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

130 மி.மீ மழை எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை 268 மி.மீ மழை பெய்துள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வால்பாறை, நீலகிரி, மேட்டுப்பாளையம் போன்ற கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ள மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

காலை நேரங்களில் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும்.

கோவையில் சில இடங்களில் வெயில் அதிகமாகக் காணப்படும், பின்னர், அதே இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் மாறி மாறி காணப்படும்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...