கார்ப்பரேட்டுகளுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கூடாது என வலியுறுத்தல்

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக நேற்று பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து துவங்கிய பேரணியில், ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். வடகோவையில் துவங்கிய பேரணி பூமார்க்கெட், தியாகி குமரன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜவீதி தேர்நிலைத் திடலில் முடிவடைந்தது. 



முன்னதாக, பேரணியில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். பொது போக்குவரத்தை சீர்குலைத்து கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசே கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யவதை அனுமதிக்காதே உள்ளிட்ட முழக்கத்தோடு பேரணியில் பங்கேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, ராஜவீதி தேர்நிலைத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் உரையாற்றினார். இப்பேரணியில் ஆட்டோ சம்மேளன தலைவர் எம். சந்திரன், பொதுச்செயலாளர் எம். சிவாஜி, பொருளாளர் ஏ. பழனி, துணை பொதுச்செயலாளர் பி.கே. சுகுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...