அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அரசாணைகளின்படி உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் மேற்கண்ட தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
கடந்த 1978 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகிய தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை கடந்த மே 18-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், இதுவரை அந்த மனு தொடர்பாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்களும் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொள்கைத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சரின் படங்கள் மட்டும் ரேஷன் கடைகள் முதல் தலைமைச் செயலகம் வரை பல்வேறு அரசு அலுவலகங்களில் உடனடியாக வைக்கப்படுவதாகவும், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்களை வைப்பதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.
டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமிழக அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய மனு தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர்.
அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் மேற்கண்ட தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
கடந்த 1978 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகிய தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை கடந்த மே 18-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், இதுவரை அந்த மனு தொடர்பாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்களும் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொள்கைத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சரின் படங்கள் மட்டும் ரேஷன் கடைகள் முதல் தலைமைச் செயலகம் வரை பல்வேறு அரசு அலுவலகங்களில் உடனடியாக வைக்கப்படுவதாகவும், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்களை வைப்பதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.
டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமிழக அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய மனு தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர்.