கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை அரசாணைகளின்படி உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் மேற்கண்ட தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இதுதொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர்.



இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

கடந்த 1978 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகிய தலைவர்களின் படங்களை வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவை கடந்த மே 18-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், இதுவரை அந்த மனு தொடர்பாக எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்றும், அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்களும் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



மேலும், கொள்கைத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சரின் படங்கள் மட்டும் ரேஷன் கடைகள் முதல் தலைமைச் செயலகம் வரை பல்வேறு அரசு அலுவலகங்களில் உடனடியாக வைக்கப்படுவதாகவும், சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்களை வைப்பதில் அரசு தாமதம் காட்டுவதாகவும் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.

டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தமிழக அரசு தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர், முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய மனு தொடர்பாக உரிய பதில் கிடைக்கும் வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...