பல்லடம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி - ஐவர் காயம்

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை, தாராபுரம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் இருந்த கழிவறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், அம்மாபாளையத்தை சேர்ந்த அசோக் என்பவர் தலையில் பலத்த காயமடைந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கிரேன் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.



இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகினர். அப்போது, தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்களை புனரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். தற்போது, மீண்டும் ஒரு பேருந்து நிலையம் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...