உணவக மேற்கூரை இடிந்து விழுந்து இளம் பெண் பலி

திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.


திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார். 



திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாம் என்பவர் அமிர்தம் என்ற உணவகம் நடத்திவருகிறார். கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த உணவகத்தின் கான்கிரீட் கூரை நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு உணவு வாங்கச் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி (22) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனிதா (22) ஆகியோர் லேசான காயமடைந்தனர். 

அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  இதனால் கோவை & ஈரோடு சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...