எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் : சி.ஐ.டி.யு., மாநாட்டில் தீர்மானம்

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  



சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன 8-வது மாநில மாநாடு கோவையில் மே 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை மூன்று. மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, சி.ஐ.டி.யு., மாவட்ட (பொ) செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், பொது போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும், எரிபொருட்களின் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் விற்பனை செய்வது போல குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும். சமீபத்தில் உயர்த்தியுள்ள எரிபொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை பெருநகரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ் கருவியுடன் பிரிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது. உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...