பிரதமரை கொலை செய்வதாக தொலைபேசியில் பேசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை : பிரதமர் நரேந்திர மோடி-யை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக தொலைபேசியில் பேசியதால் கைது செய்யப்பட்ட, முகமது ரபிக் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவர் சேலத்தை சேர்ந்த நபரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் போது பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக பேசிய ஆடியோ சமூவ வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி ரபீக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

சிறையிலிருந்த அவருக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவின் பேரில் ரபீக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

முகமது ரபிக் கைது செய்யப்பட்டதற்கான ஆணை மருத்துவமனையில் அவரிடம் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ரபீக் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதும், அதைத் தொடர்ந்து கார் திருட்டு, லாரி கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அதேபோல் கடந்த 2014-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...