குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண்கள் பெற்று சாதனை

கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த 8 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



அவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களில் எஸ். தரணிதரன், இ. ஜெகதீஷ், வி.லாவண்யா, பி.ராஜேஸ்வரி, வி.தினேஸ், எல்.சொப்னில் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குழந்தை தொழிலாளியாக இருந்த மீட்கப்பட்ட தரணிதரன் 1,093 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்க போவதாகவும் அதற்காக நீட் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "குடும்ப சூழ்நிலை காரணமாக 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிக்கு சென்றேன் அதன் பின் குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றேன். மருத்துவம் படித்து இருதய நோய் நிபுணராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். என்னைப் போன்ற குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கல்வி பயில வேண்டும்." என்றார்.

Video: A.Vignesh

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...