'கனா' பட இயக்குநரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து '3' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், தயாரிக்க இருக்கும் முதல் படத்துக்கு ’கனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கபாலியின் ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா, சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக நினைக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் தந்தை என்ற கதைக்கருவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் மகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதைக்கண்ட நடிகர் விஜய் படத்தின் இயக்குநரை பாராட்டியுள்ளார். விஜயின் வாழ்த்து தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...