கோவையில் எஸ்.வி.சேகர் குறித்து கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிஜிபி ராஜேந்திரன்

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் எஸ்.வி.சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அவர் மீது பொது அமைதியை சீர்குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. தலைமறைவாக இருக்கும் அவர், சாதாரணமாக இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜேந்திரனும் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் செய்தி எழுப்பினர். ஆனால், இதற்கு, பதிலளிக்க மறுத்த டி.ஜி.பி., அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியடையச் செய்தது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...