சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்ய எதிர்ப்பு : மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது என ஆசிரியர்கள் கருத்து

கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு அனுமதித்த ஒவியம், தையல், இசை பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் 3,333 ஆகும். இதில், 2017-ம் ஆண்டின் நிலவரப்படி 2,454 சிறப்பாசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 880 சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. 

கோவை மாவட்டத்தில் 192 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 109 பள்ளிகளில், சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர். ராஜினாமா, பணி ஓய்வு காரணமாக, தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில், ஓவிய பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இல்லை எனவும் கூறப்படுக்கிறது. இப்பணியிடங்களுக்காக, கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறும் போது :- கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையால், பல பள்ளிகளில் ஓவிய பாடமே, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 250 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளில், பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்படவுள்ளனர். அதேபோல, அப்பள்ளிகளில் இருந்து அந்தப் பணியிடமும் வரும் காலங்களில் நீக்கப்படும் எனக் கருதுகிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சிறப்பாசிரியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். இதுபோன்ற திட்டங்களால் பல ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 2012-ம் ஆண்டு தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள், என்றார்.



இதேபோல, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்க, சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கலைப்பாட ஆசிரியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. 250 மாணவர்களுக்கு கீழ் படிக்கும், அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால், எந்தப் பலனும் இல்லை. இதன்மூலம், மேலும் மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது' என்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறுகையில், "சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்யும்படி எந்த அரசாணையும் இதுவரை வரவில்லை," எனக் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...