தேனீகளை வளர்த்து வருமானத்தை உயர்த்துங்கள்..!

கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது. 



ஆண்டுதோறும் மே மாதம் 19-ம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் இன்று மற்றும் நாளை தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. 



இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு, தேனீ பெட்டிகள், வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் தேன் கொண்டு தயாரித்து பல்வேறு உணவுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். 



இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய தலைவர் ராமராஜு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனீகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. 



தேனீகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தேனீகளை வளர்க்கலாம். இது கூடுதலாக லாபத்தை அளிப்பதோடு, விளைச்சலையும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் பல்கலை., சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்." என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...