பிரிக்கால் நிர்வாகத்தை கண்டித்து குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் மின்சாதன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிர்வாகம் கடந்த சில வருடங்களாக தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக கூறி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையானோர் அத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில், பெரும்பான்மை இல்லாத சங்கமாக நிர்வாகம் மாற்ற முயல்வதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், விடுப்பு நாட்களுக்கான (ஈட்டாத விடுப்பு நாட்கள்) தொகையை நிர்வாகம் தர மறுப்பதாகவும், ஆண்டுதோறும் தந்த கல்வி உதவித்தொகை மற்றும் அலவன்ஸ் தொகையை சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் கூறி தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் ரேஸ்கோர்ஸ் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தனியார் நிறுவன அதிகாரிகளுடன் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அழைத்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப் போவதாகவும், இல்லையேல் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...