பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அவரது கொள்கைகளை முழக்கமிட்டு பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமைப்பினர்களும் மரியாதை செலுத்தி வந்தனர்.


Coimbatore: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், சங்கங்களை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பெரியார் கொள்கைகள் பற்றி மேற்கோள்காட்டி வாழ்த்துக்களையும் மரியாதைகளையும் தெரிவித்து வருகின்றனர்.



கோவையிலும் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி கோவையில் நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...