பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு அவரது கொள்கைகளை முழக்கமிட்டு பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமைப்பினர்களும் மரியாதை செலுத்தி வந்தனர்.


Coimbatore: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், சங்கங்களை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பெரியார் கொள்கைகள் பற்றி மேற்கோள்காட்டி வாழ்த்துக்களையும் மரியாதைகளையும் தெரிவித்து வருகின்றனர்.



கோவையிலும் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி கோவையில் நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...