கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.


Coimbatore: கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் அமைந்துள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், கோவை சக்தி ஆட்டோ ஆன்சிலரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் தோட்டம் மற்றும் பராமரிப்பு உபகரணங்களுடன் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி - இடிகரை சாலையில் உள்ள அசோகபுரம் ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ.44 கோடி மதிப்பில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் தொடக்கப் பகுதியான அசோகபுரம் நான்கு வழிச்சாலை மற்றும் முடிவுப் பகுதியான ஆசிரியர் காலனி ஆகிய இடங்களில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையேயும் ரவுண்டானா பகுதிகளிலும் செடிகள் மற்றும் பசுமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, 3½ அடி உயர பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதுவது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார்.

சக்தி ஆட்டோ ஆன்சிலரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் இ. சேனாவராயன் திருவள்ளுவர் சிலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, திருவள்ளுவரின் பெருமைகள் மற்றும் திருக்குறளின் மேன்மைகள் குறித்து எடுத்துரைத்து தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் எஸ். மோகன்ராஜ், தீபா மோகன்ராஜ், ராமு, சண்முகசுந்தரம், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத்தின் மெஷின் ஷாப் பொது மேலாளர் எஸ். செண்பகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

மேலும், நிறுவனத்தின் தலைவர் டி.டி. விக்டர் பால் வேதநாயகம், துணைத் தலைவர் எஸ். ஆனந்தகுமார் மற்றும் துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிறுவன நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...