நூற்றாண்டு காலத்தின் உச்சம் ; கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோடை மழையின் தாக்கத்தால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்கள், செடிகள் என அனைத்து வகை தாவரங்களும் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கிறது. காட்டு தீ என சொல்லக்கூடிய பேராபத்திலிருந்தும் மேற்குதொடர்ச்சி மலை தப்பியது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் கோடை மழை 130 மி.மீ எதிர்பார்த்த நிலையில், 285 மி.மீ மழை தற்போது வரை பெய்துள்ளது. கோடை காலம் இன்னும் முடியவில்லை, எனவே மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒர் உச்சம்.

பொதுவாக மே மாதம் அக்னி வெயிலில் 66 மி.மீ., மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மட்டும் 232 மி.மீ மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டு கோடை மழை 260 மி.மீ பதிவாகியிருந்தது. அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போது வரை 285 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழக அறிவுரைப்படி, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது வைத்திருந்ததால் அவர்களுக்கு மண் வளம் அதிகரித்துள்ளது.



மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மரம், செடி, கொடி என அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் வரும் வழக்கமான பிரச்சினையான காட்டு தீ மற்றும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினை மழை நீரினால் குறைந்துள்ளது. கோவையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36.5 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 4 முதல் 5 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது, இது அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

"மழை நீரை வீணாக்காமல் கால்வாய்கள் தூர்வார வேண்டும். சாலையின் ஓரம் உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். மரக்கிளைகள் மழையில் விழாமல் இருக்க அதனைத் தடுக்க வேண்டும், கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் அருள் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...