ஸ்டெர்லைட் போராட்டம்: வ.உ.சி மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பகுதியான வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாணவர்கள் சிலர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததையடுத்து வ.உ.சி., மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் சிறப்பு காவல் ஆய்வாளர், காவலர் மற்றும் உர்க்காவல் படையினர் என்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...