தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா..?: பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற போலீசாரின் வெறியாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களின் பாதிப்பை உலகறிய செய்து வருகின்றனர். ஊடகங்களையெல்லாம் தங்களின் மிரட்டல்களால் கட்டுப்படுத்தி, காட்டாட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தற்போது தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகளை முற்றிலுமாக முடக்கியிருப்பதாக அறிகிறோம்.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியைக் கண் முன்னே நடத்திக் கொண்டு, எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவூட்டும் விதமாக செயல்பட்டு வரும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் இணையதள சேவைகளை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே, மக்கள் விரோத அரசாக இருக்கும் அ.தி.மு.க., அரசு உடனடியாக மக்கள் நலனுக்கு ஆதரவான அரசாக மாற வேண்டும். இல்லையெனில், ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...