தூத்துக்குடியில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம் : அதிரடிப் படையினர் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 3-வது நாளாக இன்றும் பதற்றமான உச்சநிலையை எட்டியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் தொடர்ந்து மாவட்டத்தின் பதற்றநிலை குறையாமல் உள்ளது. தூத்துக்குடியில் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், முத்தம்மாள் காலனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும், தெருக்களில் உள்ள டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அண்ணாநகர் பிரதான சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தடுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

எனவே, தூத்துக்குடி அண்ணா நகரில் பதற்றத்தை குறைக்கும் வகையில் திருச்சி சரக ஐ.ஜி., வரதராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட, ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அணிவகுப்பு நடத்தினர். வஜ்ரா வாகனமும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...