முடங்கியது தொழில்நகரமான திருப்பூர் : ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் திருப்பூரில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதோடு, அங்குள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரின்டிங், டையிங், காம்பாக்டிங் உள்ளிட்ட நிறுவனங்களும் இயங்கவில்லை. அதேபோல, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 

மாவட்டம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல செயல்படுகின்றன. இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதேபோல, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கூடலூரில் நூறு சதவீத கடைகளும், குன்னூர், கோத்தகிரியில் 80 சதவீதம் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...