தொடங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை ஆரம்பம்

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோவை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது :- தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள் குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையின் முக்கிய சுற்றுலாப்பகுதியான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.



இதேபோல, இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு மேலாக லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலா வந்தவர்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர். மழைக் காரணமாக அவர்கள் குடில்களின் கீழேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 42 மி.மீ., கூடலூர் பகுதியில் 41 மி.மீ, கின்னக்கொரை பகுதியில் 20 மி.மீ., மற்றும் உதகையில் 19 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 232 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...